செய்திகள்
சிறுபாக்கம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள்
சிறுபாக்கம் அடுத்த மலையனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அடுத்த மலையனூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தேவராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் முக கவசங்களை வழங்கினார். இதில் அமைப்பாளர் பாரதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி தெய்வமணி, ஊராட்சி செயலர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.