செய்திகள்
தட்டாஞ்சாவடியில் கொரோனா பரிசோதனை முகாம்
புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய வளாகத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய வளாகத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அரசு சுகாதாரத்துறை, அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மேற்பார்வையில் இந்த முகாம் நடந்தது.
டாக்டர்கள் அருள்செல்வம், நளினி, மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் வெங்கடேஸ்வரன், ரமேஷ், முத்துவேல் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, தொகுதி நிர்வாகிகள் ஆறுமுகம், பழனிச்சாமி, சுரேஷ், ராஜா, லலித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.