செய்திகள்
விவசாயி கொலை வழக்கில் தம்பி கைது
அறந்தாங்கி அருகே விவசாயி கொலை வழக்கில் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே ஆயிங்குடி தெற்கை சேர்ந்தவர் குண்டு என்ற குண்டுபிள்ளை(வயது 75). விவசாயியான இவருக்கும், இவரது தம்பிகள் நாகலிங்கம்(67), சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குண்டுபிள்ளையை நாகலிங்கம்(67), இவரது மகன் சண்முகநாதன், சுப்பிரமணியின் மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குண்டுபிள்ளை இறந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நாகலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.