செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுச்சேரியில் இன்று மேலும் 139 பேருக்கு கொரோனா

Published On 2020-08-01 11:19 IST   |   Update On 2020-08-01 11:19:00 IST
புதுச்சேரியில் இன்று மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 16,95,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 764 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 10,94,374 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,65,103 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593 ஆக அதிகரித்துள்ளது.

Similar News