செய்திகள்
நகை பறிப்பு

புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2020-07-31 09:08 GMT   |   Update On 2020-07-31 09:08 GMT
புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஜீவா நகர் இரண்டாம் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(வயது 75). இவர் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ஆரோக்கியமேரியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News