செய்திகள்
காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை
காஞ்சிபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உயிரிழந்த சங்கரின் மனைவி துர்கா, காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உயிரிழந்த சங்கரின் மனைவி துர்கா, காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.