செய்திகள்
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி (பொறுப்பு), அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை, இன்ஸ்பெக்டர் பிடித்து விசாரித்தார். இதில் அவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிக்கரம்பையை சேர்ந்த மதியழகனின் மகன் ஆனந்தன்(வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி (பொறுப்பு), அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை, இன்ஸ்பெக்டர் பிடித்து விசாரித்தார். இதில் அவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா குருவிக்கரம்பையை சேர்ந்த மதியழகனின் மகன் ஆனந்தன்(வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.