செய்திகள்
திருவரங்குளம் அருகே கடைகளில் காய்கறி, இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள்
திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் நேற்று கடைகளில் மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி வாங்குவதற்காகவும், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காகவும் ஏராளமானவர்கள் குவிந்தனர்.
திருவரங்குளம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் இன்று மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி, மீன் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இதனால் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் நேற்று கடைகளில் மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி வாங்குவதற்காகவும், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காகவும் ஏராளமானவர்கள் குவிந்தனர். அதில் பலர் முக கவசம் அணியவில்லை. மேலும் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, ஒட்டி உரசியபடி நின்றதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வரை கொரோனா பரவலை தடுக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் இன்று மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி, மீன் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இதனால் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் நேற்று கடைகளில் மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி வாங்குவதற்காகவும், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காகவும் ஏராளமானவர்கள் குவிந்தனர். அதில் பலர் முக கவசம் அணியவில்லை. மேலும் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, ஒட்டி உரசியபடி நின்றதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வரை கொரோனா பரவலை தடுக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.