செய்திகள்
மின்கம்பத்தில் ஆட்டோ மோதி டிரைவர் பலி
மின்கம்பத்தில் ஆட்டோ மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 51). ஆட்டோ டிரைவரான இவர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணியை ஏற்றிச்சென்று, திருவப்பூர் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் ஆட்டோ மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 51). ஆட்டோ டிரைவரான இவர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணியை ஏற்றிச்சென்று, திருவப்பூர் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் ஆட்டோ மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.