செய்திகள்
முககவசம் அணியாத 9,360 பேருக்கு அபராதம்
புதுக்கோட்டையில் முககவசம் அணியாத 9,360 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முககவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 6 குழுவினர், முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி கடந்த திங்கட்கிழமையில் இருந்து இதுவரை 9,360 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முககவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 6 குழுவினர், முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி கடந்த திங்கட்கிழமையில் இருந்து இதுவரை 9,360 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.