செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 9,360 பேருக்கு அபராதம்

Published On 2020-07-10 13:18 GMT   |   Update On 2020-07-10 13:18 GMT
புதுக்கோட்டையில் முககவசம் அணியாத 9,360 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முககவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 6 குழுவினர், முககவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி கடந்த திங்கட்கிழமையில் இருந்து இதுவரை 9,360 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News