செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2020-07-09 11:06 GMT   |   Update On 2020-07-09 11:06 GMT
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதன் பாதிப்பு குறைவாக இருந்தது. 2, 3 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு இருந்து வந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 முதல் 50 ஆக அதிகரித்து உள்ளது. அதன்பிறகு வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் மற்றும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 418 ஆக இருந்தது.

இந்தநிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை என 2 பேர் கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலியாகினர். புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியை சேர்ந்த 65 வயது பெண் மற்றும் அடப்பன்வயல் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News