செய்திகள்
நாகை மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 314 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து தொற்று எண்ணிக்கை 306 ஆக கணக்கிடப்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது. 163 பேர் குணம் அடைந்துள்ளனர். 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.