செய்திகள்
விபத்து பலி

திருவாடானை அருகே கார் மோதி வாலிபர் பலி

Published On 2020-07-07 13:30 GMT   |   Update On 2020-07-07 13:30 GMT
திருவாடானை அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:

திருவாடானை அருகே உள்ளது நீர்குன்றம் கிராமம்.அந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சார்லஸ் (வயது 36). இவருக்கு அழகு என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இவர் தேவகோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நீர்குன்றம் கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார் அனுமந்தகுடி அருகே செல்லும்போது எதிரே வந்த கார் மோதியதில் சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வழக்குபதிந்து ஆவுடையார் கோவில் தாலுகா ஆள்காட்டிவயல் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ரமேசை கைது செய்தார்.
Tags:    

Similar News