செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சிவகங்கையில் 12 பேருக்கு கொரோனா - முதியவர் பலி

Published On 2020-07-07 12:28 IST   |   Update On 2020-07-07 12:28:00 IST
சிவகங்கையில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கையில் ஒரு பெண், ஒரு ஆண், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், புலியடிதம்பத்தில் ஒரு ஆண், படமாத்தூரில் ஒரு ஆண், நாட்டரசன் கோட்டையில் ஒரு பெண், காளையார்கோவிலில் ஒரு பெண், இளையான்குடியில் ஒரு ஆண், மேல்குடியில் ஒரு பெண், பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆண், திருமங்கலத்தை சேர்ந்த ஒரு ஆண் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த காரைக்குடியை சேர்ந்த 77 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

Similar News