செய்திகள்
புதுக்கோட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
புதுக்கோட்டை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 24). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற லாரி மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சந்திரசேகர் இறந்தார். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 24). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற லாரி மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சந்திரசேகர் இறந்தார். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.