செய்திகள்
தற்கொலை

கீழ்வேளூர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை

Published On 2020-07-05 11:06 GMT   |   Update On 2020-07-05 11:06 GMT
கீழ்வேளூர் அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தக்குடி வெள்ளந்தெருவை சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (வயது40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று இவர் வீட்டின் பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலதண்டாயுதம் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Tags:    

Similar News