செய்திகள்
தற்கொலை

மயிலாடுதுறை அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

Published On 2020-07-05 09:14 GMT   |   Update On 2020-07-05 09:14 GMT
மயிலாடுதுறை அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
பாலையூர்:

மயிலாடுதுறை அருகே பொரும்பூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீபராம். இவரது மகன் ஜெகன்சாமி(வயது25). பெயிண்டர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் ஜெகன்சாமியை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் வேறு வேலை தெரியாது, பெயிண்டிங் வேலை தான் தெரியும் என கூறி வீட்டில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பூச்சிமருந்தை(விஷம்) ஜெகன்சாமி குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். இதுகுறித்து ஜெகன்சாமியின் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News