செய்திகள்
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் உடல் நலம் பாதிப்படைந்த சிவகங்கையை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும், காரைக்கடி சூடாமணிபுரத்தை சேர்ந்த 67 வயது பெண் ஒருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் சிகிச்சையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஒட்டபாளையத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், பார்த்திபனூரை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்தவர்களில் பூரண குணமடைந்த 13 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தேவகோட்டையை சேர்ந்த 9 ஆண், 2 பெண், காரைக்குடியை சேர்ந்த 8 ஆண், 3 பெண், சிவகங்கையை சேர்ந்த 3 ஆண், ஒரு பெண் திருப்பத்தூரை சேர்ந்த 2 ஆண், கோட்டையூரில் ஒரு ஆண், புதுவயலில் ஒரு பெண், சருகணியில் ஒரு பெண் உள்பட 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் உடல் நலம் பாதிப்படைந்த சிவகங்கையை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும், காரைக்கடி சூடாமணிபுரத்தை சேர்ந்த 67 வயது பெண் ஒருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் சிகிச்சையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஒட்டபாளையத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், பார்த்திபனூரை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்தவர்களில் பூரண குணமடைந்த 13 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தேவகோட்டையை சேர்ந்த 9 ஆண், 2 பெண், காரைக்குடியை சேர்ந்த 8 ஆண், 3 பெண், சிவகங்கையை சேர்ந்த 3 ஆண், ஒரு பெண் திருப்பத்தூரை சேர்ந்த 2 ஆண், கோட்டையூரில் ஒரு ஆண், புதுவயலில் ஒரு பெண், சருகணியில் ஒரு பெண் உள்பட 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.