செய்திகள்
தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலையை கண்காணிக்கும் மருத்துவர்கள்
வேலூர் ஜெயிலில் தொடர்ந்து 26-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தினமும் கண்காணித்து வருகிறார்கள்.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனிஅறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளை போன்று செல்போன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி முருகன் ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல் சோர்வு அடையும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. மேலும் முருகனின் உடல்நிலையை ஜெயில் வளாக டாக்டர்கள் தினமும் கண்காணித்து வருகிறார்கள். ஜெயில் அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் 26-வது நாளாக நேற்று முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனிஅறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளை போன்று செல்போன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச அனுமதிக்கும்படி முருகன் ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல் சோர்வு அடையும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. மேலும் முருகனின் உடல்நிலையை ஜெயில் வளாக டாக்டர்கள் தினமும் கண்காணித்து வருகிறார்கள். ஜெயில் அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் 26-வது நாளாக நேற்று முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.