செய்திகள்
கண்டுபிடிக்கப்பட்ட புதிய தரைத்தளம்

அகழாய்வு பணி- கீழடியில் புதிய தரைத்தளம் கண்டுபிடிப்பு

Published On 2020-06-26 05:07 GMT   |   Update On 2020-06-26 05:07 GMT
கீழடியில் ஒரு குழியில் ஏற்கனவே பானைகள், வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று அதே குழியில் தரைத்தளம் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 6-ம்கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் கீழடியில் நேற்று ஒரு குழியில் புதிய தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. கீழடியில் ஒரு குழியில் ஏற்கனவே பானைகள், வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று அதே குழியில் தரைத்தளம் போன்ற அமைப்பு நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த தரைத்தளம் பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முழுமையான ஆய்வுக்குபின் இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற முழுவிவரம் தெரியும் என்று அதிகாரிகள் தெவித்தனர். 
Tags:    

Similar News