செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் 25-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

Published On 2020-06-26 02:59 GMT   |   Update On 2020-06-26 02:59 GMT
முருகன் 25-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜெயில் கைதிகளை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் செல்போன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். முருகன் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

அதனால் முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.

இந்த நிலையில் முருகன் நேற்று 25-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
Tags:    

Similar News