செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சிவகங்கையில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று

Published On 2020-06-25 16:03 IST   |   Update On 2020-06-25 16:03:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மானாமதுரையில் ஒரு ஆண், பெரியகோட்டையில் 2 பெண்கள், சிவகங்கையில் ஒரு பெண், மானாமதுரையை அடுத்த தே.புதுக்கோட்டையில் ஒரு பெண், தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடியில் ஒரு ஆண், முக்குளத்தில் ஒரு ஆண், மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த ஒரு பெண், மானாமதுரை அருகே லாடனேந்தலை சேர்ந்த ஒரு ஆண், ஆபத்தாரன்பட்டியில் ஒரு ஆண், தெத்தனகாட்டில் 2 ஆண்கள் உள்பட 14 பேருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. திருப்புவனத்தில் வசித்து வந்த டி.புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் சிகிச்சைக்காக கடந்த 20-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Similar News