செய்திகள்
கோப்புப்படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,016 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-23 12:16 IST   |   Update On 2020-06-23 12:16:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 144 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,016 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 794-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,872 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். 

Similar News