செய்திகள்
செங்கல்பட்டு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
செங்கல்பட்டு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுடைய மகள் ஆர்த்தி (வயது 17). இவர்கள் கல்பாக்கத்தை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தங்கி இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுடைய மகள் ஆர்த்தி (வயது 17). இவர்கள் கல்பாக்கத்தை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தங்கி இருந்தனர்.
பிளஸ்-2 முடித்துள்ள ஆர்த்தி நேற்று முன்தினம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது தாயார் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாயே என்று மகளை கண்டித்தார்.
அதன் பின்னர் நாகராஜ், சிவகாமி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். தாயார் திட்டியதால் மன வருத்தம் அடைந்த ஆர்த்தி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கினார். சிறிது நேரத்தில் ஆர்த்தியின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். ஆர்த்தி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.