செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா

Published On 2020-06-21 15:25 IST   |   Update On 2020-06-21 15:25:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,747 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,620 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,747 ஆக அதிகரித்துள்ளது.

Similar News