செய்திகள்
காளைமாடு சிலை அருகே வாரச்சந்தை செயல்பட தொடங்கியது
திங்கட்கிழமைகளில் கூடும் காளைமாடு சிலை பகுதி வாரச்சந்தை நேற்று கூடியது. வியாபாரிகள் குறைந்த அளவில்தான் வந்து இருந்தனர். பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வந்துபொருட்கள் வாங்கிச்சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஆங்காங்கே வாராந்திர சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தைகளில் காய்கள், மளிகைப்பொருட்கள், துணி, வீட்டு உபயோகப்பொருட்கள், கறுவாடு என்று அனைத்து வகை பொருட்களும் கிடைக்கும். இந்த வாராந்திர சந்தைகளில் வியாபாரம் செய்யும் தொழிலை ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த சந்தைகளில் மட்டுமே கடைகள் நடத்துவார்கள்.
கொரோனா தொற்று பரவல் தொடங்கி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் சந்தைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகரையொட்டி காளைமாடு சிலை, மகாராஜா தியேட்டர் பகுதி, சூரம்பட்டி, சோலார் உள்ளிட்ட பகுதியில் வாராந்திர சந்தைகள் செயல்பட்டு வந்தன.
இந்த சந்தைகள் கடந்த வாரம் வரை நடைபெறவில்லை. இந்த வாரம் முதல் சந்தைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வழக்கமாக திங்கட்கிழமைகளில் கூடும் காளைமாடு சிலை பகுதி வாரச்சந்தை நேற்று கூடியது. வியாபாரிகள் குறைந்த அளவில்தான் வந்து இருந்தனர். பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வந்துபொருட்கள் வாங்கிச்சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஆங்காங்கே வாராந்திர சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தைகளில் காய்கள், மளிகைப்பொருட்கள், துணி, வீட்டு உபயோகப்பொருட்கள், கறுவாடு என்று அனைத்து வகை பொருட்களும் கிடைக்கும். இந்த வாராந்திர சந்தைகளில் வியாபாரம் செய்யும் தொழிலை ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த சந்தைகளில் மட்டுமே கடைகள் நடத்துவார்கள்.
கொரோனா தொற்று பரவல் தொடங்கி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் சந்தைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகரையொட்டி காளைமாடு சிலை, மகாராஜா தியேட்டர் பகுதி, சூரம்பட்டி, சோலார் உள்ளிட்ட பகுதியில் வாராந்திர சந்தைகள் செயல்பட்டு வந்தன.
இந்த சந்தைகள் கடந்த வாரம் வரை நடைபெறவில்லை. இந்த வாரம் முதல் சந்தைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வழக்கமாக திங்கட்கிழமைகளில் கூடும் காளைமாடு சிலை பகுதி வாரச்சந்தை நேற்று கூடியது. வியாபாரிகள் குறைந்த அளவில்தான் வந்து இருந்தனர். பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வந்துபொருட்கள் வாங்கிச்சென்றனர்.