செய்திகள்
மரணம்

கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் மயில்கள் பலி

Published On 2020-06-08 14:15 IST   |   Update On 2020-06-08 14:15:00 IST
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்கள் பலியானது.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவளமலை செல்வபுரம் பகுதிக்கு ஏராளமான மயில்கள் இறை தேடி வந்து செல்வது வழக்கம். அது போல் இன்று காலை 2 பெண் மயில்கள் வந்தது.

பின்னர் மயில்கள் மேலே பறக்க முயன்ற போது அங்குள்ள மின் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்களும் இறந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News