செய்திகள்
கைது

கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

Published On 2020-06-07 19:57 IST   |   Update On 2020-06-07 19:57:00 IST
கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி:

கோபி அருகே உள்ள முருகன் புதூர் பவளமலை முட்புதர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்த பழனிசாமி, சிவகுமார், ஆறுமுகம், ஜெகதீஷ், கதிர்வேல் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 44 ஆயிரத்து 120 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News