செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஈரோட்டில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-06-07 09:12 GMT   |   Update On 2020-06-07 09:12 GMT
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி வரை 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதில் ஒருவர் இறந்தார். மற்ற 69 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் கவுந்தப்பாடியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியானது. அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சென்னையில் இருந்து வந்த ஈரோடு சூளையை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் அபுதாபியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 35 ஆணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரேனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டு உள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆனால் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லைஎன சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News