செய்திகள்
சிறுதாவூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த ஒமேகா துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஓமேகா சிப்காட், அகரம், ஆமூர், பஞ்சந்தீர்த்தி, கழனிபாக்கம், நெல்வாய், முந்திரி தோப்பு, மேல கனகப்பட்டு, அருங்குன்றம், சிறுதாவூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று செங்கல்பட்டு மின் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.