செய்திகள்
தற்கொலை

கடலூர் முதுநகர் அருகே பெண் தற்கொலை

Published On 2020-06-05 06:55 GMT   |   Update On 2020-06-05 06:55 GMT
கடலூர் முதுநகர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி அஞ்சலைதேவி (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News