செய்திகள்
கைது

நெய்வேலியில் கல்லூரி மாணவி பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2020-06-04 14:37 IST   |   Update On 2020-06-04 14:37:00 IST
நெய்வேலியில் திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மேல்பாப் பணம் பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முருகானந்தம் கல்லூரி மாணவியிடம் திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். இதைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முருகானந்தத்திடம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் முருகானந்தம் கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி நடந்த சம்பவங்களை அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் கல்லூரி மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர்.

Similar News