செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2020-06-04 08:26 GMT   |   Update On 2020-06-04 08:26 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,446 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,872ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 1,370 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,446 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 671 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News