செய்திகள்
விபத்து

கடலூர் அருகே விபத்து- 2 வாலிபர்கள் பலி

Published On 2020-06-04 07:16 GMT   |   Update On 2020-06-04 07:16 GMT
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மருதாடு சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 26). டிரைவர். இவர் மருதாடு பகுதியில் இருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்றார். இவர் நெல்லிக்குப்பம் அருகே தோட்டப்பட்டு பகுதியில் சென்றார்.

அந்த வழியாக பண்ருட்டி ஏ.பி. குப்பம் பகுதியை சேர்ந்த அறிவழகன் (22) மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் மின்சாரத்துறையில் தற்காலிகமாக பயிற்சி பெற்று வந்தார். இவருடன் கணிசப்பாக்கம் சேர்ந்த கயல்விழி (18) என்பவரும் வந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் சின்னத்தம்பி உயிர் இழந்தார். அறிவழகன், கயல்விழி காயத்துடன் உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அறிவழகன் உயிர் இழந்தார். கயல்விழி என்பவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கயல்விழியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News