செய்திகள்
தற்கொலை

கடலூரில் கணவன் இறந்த நாளில் மகனுடன் தற்கொலை செய்த மனைவி

Published On 2020-06-03 07:45 GMT   |   Update On 2020-06-03 07:45 GMT
கடலூர் அருகே கணவன் இறந்த நாளில் மனைவி மற்றும் மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலூர்:

கடலூர் அருகே உள்ள கோண்டூர் சாய்பாபா நகரை சேர்ந்தவர் முத்து. இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மனைவி லதா (வயது 60). இவரது மகன் சேதுராமன்(25). இவர்கள் இருவரும் சாய்பாபா நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இன்று காலை லதாவின் வீடு பூட்டிக்கிடந்தது. வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். உள்ளே சென்று பார்த்த போது லதாவும், ஜெயராமனும் இறந்து கிடந்தனர்.

அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் கடலூர் புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். லதாவின் வீட்டில் வி‌ஷ பாட்டில் ஒன்று கிடந்தது. எனவே 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. பின்னர் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரைணையில் இதே நாளில் லதாவின் கணவர் முத்து கடந்த வருடம் இறந்ததாக தெரிவித்தனர். அதன்படி 2 பேரும் இன்று தற்கொலை செய்து உள்ளனர்.

தாயும், மகனும் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டனரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News