செய்திகள்
மேல்மருவத்தூர் அருகே குப்பை எரிக்கும் தகராறில் விவசாயி கொலை
மேல்மருவத்தூர் அருகே குப்பை எரிக்கும் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த கிளியா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 56). விவசாயி. நேற்று இவருக்கும், இவரது வீட்டின் எதிரே உள்ள ஜனார்த்தனன் என்பவரது மனைவி ரேவதிக்கும் குப்பையை எரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த ரேவதியின் உறவினர்களான முகேஷ் (27), மோகன்ராஜ் (29) ஆகியோர் பிரபாகரனை கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பிரபாகரனின் மனைவி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து முகேஷ், மோகன்ராஜ் இருவரையும் கைது செய்தார்.