செய்திகள்
காட்பாடியில் இருந்து பீகாருக்கு இன்று சிறப்பு ரெயில்
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் 1464 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் வேலூரில் இருந்து மட்டும் 444 பேர் செல்கின்றனர்.
அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பஸ்கள் மூலம் அவர்கள் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு ரெயிலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
காட்பாடியிலிருந்து இன்று மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது. மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
காட்பாடியில் இருந்து இதுவரை 7 சிறப்பு ரெயில்களில் சுமார் 9 ஆயிரம் பேர் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று பீகாருக்கு செல்லும் 8-வது ரெயிலில் 1464 பேர் செல்கின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் 1464 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் வேலூரில் இருந்து மட்டும் 444 பேர் செல்கின்றனர்.
அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பஸ்கள் மூலம் அவர்கள் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு ரெயிலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
காட்பாடியிலிருந்து இன்று மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது. மேற்குவங்கத்திற்கு சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
காட்பாடியில் இருந்து இதுவரை 7 சிறப்பு ரெயில்களில் சுமார் 9 ஆயிரம் பேர் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று பீகாருக்கு செல்லும் 8-வது ரெயிலில் 1464 பேர் செல்கின்றனர்.