செய்திகள்
காட்பாடியில் கட்டிட தொழிலாளி மர்ம மரணம்- போலீசார் விசாரணை
காட்பாடியில் கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
வேலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கட்டிட தொழிலாளியான இவர் வெல்லைக்கல்மேடு பகுதியில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நேற்று காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கட்டிட தொழிலாளியான இவர் வெல்லைக்கல்மேடு பகுதியில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நேற்று காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.