செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூரில் குஜராத்தில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா சோதனை

Published On 2020-05-15 15:02 IST   |   Update On 2020-05-15 15:02:00 IST
வேலூரில் குஜராத்தில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யவும் அவர்களை 14 நாட்கள் கண்காணிக்கவும் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நேற்று வேலூரை சேர்ந்த 15 பேர் குஜராத் மாநிலத்திலிருந்து பஸ்சில் கிருஷ்ணகிரி வந்தனர். அவர்கள் ஒருவாரம் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று அவர்கள் பஸ் மூலம் வேலூர் வந்தனர். அவர்களை வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது ரத்தம் சளி ஆகியவை பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

Similar News