செய்திகள்
போராட்டம்

ஓய்வுபெறும் வயதை அதிகரித்ததற்கு எதிர்ப்பு- வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்

Published On 2020-05-14 14:23 IST   |   Update On 2020-05-14 14:23:00 IST
குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத் துணி கட்டிக்கொண்டும், வயிற்றில் அடித்துக் கொண்டும் போராட்டம் செய்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயிற்றில் ஈரத் துணி கட்டிக்கொண்டும், வயிற்றில் அடித்துக் கொண்டும் போராட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செந்தமிழ் சுர்ஜித், செல்வகுமார், சுப்பிரமணி, ராஜேந்திரன், மதன், செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசு ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை கண்டித்தும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Similar News