செய்திகள்
கோப்பு படம்

குடியாத்தத்தில் அரசு டாக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

Published On 2020-05-13 14:37 IST   |   Update On 2020-05-13 14:37:00 IST
குடியாத்தம் அருகே காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அரசு டாக்டரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் பிச்சனூர் தலையாரி முனிசாமி தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் யுவராஜ் வயது 28 இவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு பலமனேர் சாலை வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் இவரை உரசியபடி சென்றுள்ளனர். இதை அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களும் டாக்டர் யுவராஜ் தாக்கி மிரட்டி உள்ளனர்.

இதனையடுத்து டாக்டர் யுவராஜ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் பாலவெங்கட்ராமன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து டாக்டர் யுவராஜை தாக்கியதாக குடியாத்தம் அடுத்த பீமன் பட்டியை சேர்ந்த குபேந்திரன் (வயது 25), செருவங்கியை சேர்ந்த லோகேஷ் குமார் (24), சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் (26) ஆகிய 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News