செய்திகள்
விபத்து

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2020-05-11 07:57 GMT   |   Update On 2020-05-11 07:57 GMT
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு கிராமம், ராசாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 23). இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபாண்டியன் இறந்தார். 

புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியான்டி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News