செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை- பள்ளி மாணவன் கைது

Published On 2020-05-11 07:42 GMT   |   Update On 2020-05-11 07:42 GMT
வேதாரண்யம் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், கோவில்பத்து மேலக்காடுபகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (வயது 62). இவர் தனியேஒரு கூரைவீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துலெட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த முத்து லெட்சுமியின் பாதுகாவலர் சரபோஜிராஜன் வேட்டைக் காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தார்.

Tags:    

Similar News