செய்திகள்
நாகை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,622 பேர் மீது வழக்குப்பதிவு
நாகை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,377 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்த நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 313 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 200 மோட்டார் சைக்கிள்கள், 32 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,303 மோட்டார் சைக்கிள்களும், 74 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 4,377 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மது குற்றங்களை தடுக்கும் வகையில் இதுவரை 513 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 494 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,377 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்த நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 313 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 200 மோட்டார் சைக்கிள்கள், 32 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,303 மோட்டார் சைக்கிள்களும், 74 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 4,377 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மது குற்றங்களை தடுக்கும் வகையில் இதுவரை 513 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 494 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.