செய்திகள்
மருத்துவ முகாம்

வேலூர் சைதாப்பேட்டையில் கொரோனா மருத்துவ முகாம்

Published On 2020-04-27 18:51 IST   |   Update On 2020-04-27 18:51:00 IST
வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை பரிசோதிக்க அப்பகுதியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வேலூர்:

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை பரிசோதிக்க அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருவலம் சுகாதார மைய வட்டார மருத்துவ அலுவலர் கணேஷ், அரசு மருத்துவர் லோகானந்த் ஆகியோர் தலைமை தாங்கி பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், சைதாப்பேட்டை பகுதி மக்கள், மருத்துவ சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த வடமாநிலத்தவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் அவர்களிடம், காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீர்பருகுதல், சமூக இடைவெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில், திருவலம் சுகாதார மைய செவிலியர் விஜயா, ஆய்வக பரிசோதனை உதவியாளர் சரவணன், கல்வித்துறை மற்றும் 10-வது பட்டாலியன் என்.சி.சி.சார்பில் முதன்மை அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News