செய்திகள்
டாக்டர்

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் குணமடைந்தார்

Published On 2020-04-27 14:56 IST   |   Update On 2020-04-27 14:56:00 IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் குணமடைந்தார். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் கொரோனா பரிசோதனைக்கு முன்பு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கிளீனிக்கில் சிகிச்சை பெற்றார். அந்த கிளீனிக்கில் உள்ள 74 வயது டாக்டர் மற்றும் நர்சு ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 74 வயது டாக்டருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

அவரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News