செய்திகள்
கொரோனா வைரஸ்

சீர்காழி பகுதியில் கிராமங்களுக்கு சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

Published On 2020-04-26 19:55 IST   |   Update On 2020-04-26 19:55:00 IST
சீர்காழி பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, லோகநாதன் ஆகியோர் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து கொரோனா ஏற்படாமல் தடுக்க எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது.
சீர்காழி:

சீர்காழி அடுத்த அகணி ஊராட்சியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, லோகநாதன் ஆகியோர் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து கொரோனா ஏற்படாமல் தடுக்க எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது.

ஊரடங்கு உத்தரவினை பின்பற்றி அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாரத்திற்கு 2 தினங்கள் மட்டும் குடும்பத்தில் ஒருவர் மட்டும் வெளியே சென்று பொருட்கள் வாங்கவும், வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசத்தினை அணிந்தும், மீண்டும் வீடு திரும்பும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதேபோல் திட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சீர்காழி காவல்துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், கிருமி நாசினி, முக கவசம் ஆகியவற்றை இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழங்கினார்.

Similar News