வேலூரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம்
வேலூர்:
வேலூர் மாநகர பகுதியில் ஊரடங்கு மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆனாலும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை நேரங்களிலும் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பைக்கில் சுற்றி திரிகின்றனர். இவர்களை மடக்கி போலீசார் விசாரித்தால் மருந்து மற்றும் உணவு வாங்க செல்வதாக காரணம் கூறுகின்றனர்.
மேலும் சில வாலிபர்கள் அத்துமீறி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.இதை தடுக்க போலீசார் கட்டாய ஹெல்மட் அமல் படுத்தி உள்ளனர்.
இதனால் வேலூரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படுகிறது.
வேலூர் கிரீன் சர்கிள் அண்ணா சாலை காட்பாடி தொரப்பாடி சத்துவாச்சாரி பகுதிகளில் இன்று காலையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
2 நாட்களில் ஹெல்மெட் அணியாத 500 க்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்கபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.