செய்திகள்
கோப்பு படம்

வேலூரில் ஊரடங்கு மீறிய துணிக்கடை, ஓட்டலுக்கு சீல்

Published On 2020-04-25 13:51 IST   |   Update On 2020-04-25 13:51:00 IST
வேலூரில் ஊரடங்கை மீறி ஓட்டலில் சமூக இடைவெளி கடை பிடிக்காத துணிக்கடை மற்றும் ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வேலூர்

வேலூர் தாசில்தார் ரமேஷ்,வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் இன்று காலை வேலூர் மூங்கில் மண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கு மீறி திறந்திருந்த துணிக்கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் அங்குள்ள ஓட்டலில் சமூக இடைவெளி கடை பிடிக்கவில்லை இதனால் அந்த ஓட்டலுக்கும் சீல் வைத்தனர்.

Similar News