செய்திகள்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் லாரி மோதி தொழிலாளி படுகாயம்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காய்கறி வாங்க வந்த தொழிலாளி லாரி மோதி படுகாயம் அடைந்தார்.
வேலூர்:
வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன். இவர் செல்லியம்மன் கோவில் எதிரேயுள்ள பார்க்கிங்கில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
செல்லியம்மன் கோவில் சாலையில் இருந்து எதிர் திசைக்கு சென்றபோது வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற லாரி தேவநாதன் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரம் அவரது கால் மீது ஏறி இறங்கியதில் காலில் அடிப்பகுதி நசுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவநாதனின் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன். இவர் செல்லியம்மன் கோவில் எதிரேயுள்ள பார்க்கிங்கில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
செல்லியம்மன் கோவில் சாலையில் இருந்து எதிர் திசைக்கு சென்றபோது வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற லாரி தேவநாதன் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரம் அவரது கால் மீது ஏறி இறங்கியதில் காலில் அடிப்பகுதி நசுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவநாதனின் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.